×

தஞ்சை கோட்ட எல்ஐசி முகவர்களுக்கான செயற்குழு கூட்டம்

 

தஞ்சாவூர், ஜூலை 20: தஞ்சையில் எல்.ஐ.சி முகவர்களுக்கான தஞ்சை கோட்ட செயற்குழு கூட்டம் சங்கத் தலைவர் செல்வகணேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிராமபுற ஏழை எளிய மக்களும் எல்.ஐ.சியில் காப்பீடு செய்து பலன் பெற ஏற்கனவே இருந்தது போல் 50 ஆயிரம் ரூபாய் அளவில் ஒரு புதிய திட்டத்தை நடைமுறைபடுத்திட வேண்டும். பாலிசிதாரர்கள் தாங்கள் செலுத்திய பிரிமியம் தொகையிலிருந்து கடன் பெறும் போது அதற்கான வட்டி விகிதத்தை குறைத்திட வேண்டும். நாடு முழுவதிலுமுள்ள எல்.ஐ.சி முகவர்களுக்கான குழு காப்பீட்டுக்கான வயதை 100 ஆக உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் முறைப்படி பணிக்காலத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Tags : Thanjavur Division ,Agents Working Committee ,Thanjavur ,Thanjavur Division LIC ,President ,Selvaganesan ,
× RELATED திமுகவில் இணைந்த பாமக நிர்வாகிகள்