தஞ்சாவூர், ஜூலை 20: கோவை காவலர் பயிற்சி பள்ளி 1988ம் ஆண்டு இரண்டாம் பேட்ச் பயிற்சி பெற்ற காவலர்களின் 6ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நேற்று தஞ்சையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கணேசன் வரவேற்புரை ஆற்றினார். தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் முருகேசன் கணேசன், நாகை மோகன்ராஜ் வேதமூர்த்தி, விருதுநகர் சூரிய சந்திரன் ஜோதி, திண்டுக்கல் ராஜவேல் குருசாமி, மதுரை மாநகரம் ராஜி, சின்னசாமி, மதுரை மாவட்டம் தேவமாறன் பழனியப்பன், சிவகங்கை மாவட்டம் ராமச்சந்திரன் பாலுசாமி, ராமநாதபுரம் முத்துசாமி இளங்கோவன், தேனி மாவட்டம் ராமச்சந்திரன் வரதராஜன், குமரி மாவட்டம் ராஜபாஸ்கர் சாமிதுரை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 1988ம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் கலந்து கொண்டனர்.
