திருச்செங்கோடு, ஜூலை 20: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், மஞ்சள் விற்பனை டெண்டர் மூலம் நடந்தது. இதில் பூலாம்பட்டி, சங்ககிரி, அந்தியூர், துறையூர், தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், தர்மபுரி, பென்னாகரம், தலைவாசல், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.3,999 முதல் ரூ.19,860 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.6,999 முதல் ரூ.17,002 வரையிலும், பனங்காளி ரூ.3,502 முதல் ரூ.31,599 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 1,434 மூட்டைகள் மஞ்சள் ரூ.1.52 கோடிக்கு விற்பனையானது.
