கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனிப்படை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இங்கு தங்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கஞ்சா, கஞ்சா ஆயில், எல்எஸ்டி போதை ஸ்டாம்ப், கொக்கைன், மெத்தபெட்டமைன் உள்ளிட்ட விலை உயர்ந்த போதைப்பொருட்கள் சிக்கின.
இதையடுத்து விடுதியின் உரிமையாளர் போதி சாத்விக்நாத் (40) மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி திண்டுக்கல் எஸ்பி ஜெயக்குமார் கூறும்போது, ‘‘விசாரணையில் விலை உயர்ந்த இந்த போதை பொருட்கள் கோவாவில் இருந்து வாங்கி வரப்பட்டது என தெரிய வந்துள்ளது. இந்த விடுதிக்கு சீல் வைப்பதுடன், அதன் உரிமையாளர் வங்கி கணக்குகள் முடக்கப்படும்’’ என்றார்.
