மீட்டர் கணக்கீடு, பில்லிங் செயல்முறையில் குறைபாடுகளால் சில இடங்களில் அதிக கட்டணம் பதிவாகியுள்ளது: தலைமை பொறியாளர் விளக்கம்

 

சென்னை: மீட்டர் கணக்கீடு, பில்லிங் செயல்முறையில் குறைபாடுகளால் சில இடங்களில் அதிக கட்டணம் பதிவாகியுள்ளது என்று தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். அதிக மின் கட்டணம் விதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மின்வாரிய தலைமை பொறியாளர் தமிழ்நாடு முழுவதும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மின்சார துறையின் சில பிரிவுகளில் நடைபெறும் அசாதாரணமான பில்லிங் முறையால் பொதுமக்களுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு காலமுறைப்படி திடீர் ஆய்வு மேற்கொள்ள மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுரை. பழுதடைந்த மீட்டரின் மின் அளவுகளில் இருந்து ஆரம்பத்திலேயே பிரச்சினையை பிரிவு அலுவலகம் கண்டறிய வேண்டும்

Related Stories: