- கோட்டிகனக் கூறுகிறார்
- தமிழ்நாடு
- திருப்பூர் திருப்பூர்
- நாகேந்திர குமார்
- திருப்பூர் செட்டிபாளையம்
- பிரகாஷ்
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
திருப்பூர்: திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரகுமார். இவர் டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் இணைந்து நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் பலரிடமும் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒவ்வொரு நபரிடமும் ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை பெற்றுள்ளார். அவர்களுக்கு சந்தேகம் வராத வகையில், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அரசு வேலை தொடர்பான பயிற்சி வழங்கி, அவர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஊதியமாக கொடுத்து நம்ப வைத்துள்ளனர்.
தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். போலி பணி நியமன ஆணைகளையும் வழங்கியுள்ளனர். பணி நியமன ஆணை பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்றபோதுதான், அது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதனால் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் செட்டிபாளையம் பகுதியில் உள்ள நாகேந்திரகுமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர். திருப்பூர் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் 800-க்கும் மேற்பட்டவர்களிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
