×

வார இறுதிநாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை வார இறுதிநாளான நேற்று பவுனுக்கு ரூ.280 உயர்ந்தது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் 16ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,100க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4,800க்கும் விற்பனையானது. இந்த நிலையில் வாரத்தின் இறுதிநாளான நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,080க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையில் நேற்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235க்கும், பார் வெள்ளி ரூ.2.35 லட்சத்துக்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை...