×

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகளுக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: 2026-27ம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகளை ‘‘இளையோர் திறன்’’ என்ற மையக் கருத்தின் அடிப்படையில் பள்ளி, வட்டாரம். மாவட்டம் மற்றும் மாநில அளவில் பின்வரும் ஐந்து பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. 1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 9 போட்டிகள், 3 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 15 போட்டிகள், 6 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 18 போட்டிகள், 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 32 போட்டிகள், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 32 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மேலும், சிறப்பு மாணவர்களுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. கலைத்திருவிழாப் போட்டிகளில் பங்குபெறுவதற்காக மாணவர்களிடமிருந்து எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

கலைத்திருவிழாப் போட்டிகளை பள்ளியளவில் ஒரு அமைப்புக் குழுவினை உருவாக்கி, நடத்திட வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களின் விவரங்களை போட்டி வாரியாக இஎம்ஐஎஸ் வலைதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பள்ளி அளவில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடத்தில் வெற்றிபெறும் தனிநபர் மற்றும் குழுவினர் மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறத் தகுதி பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,
× RELATED பெரம்பலூர் அருகே பள்ளி வளாகத்தில் காலை உணவு திட்ட பணியாளர் தற்கொலை