ரோகித் சர்மா ஓய்வு குறித்த வதந்தி மூத்த வீரர்களை நடத்தும் விதம் வெட்கக்கேடானது: நடிகை அமீஷா படேலின் பதிவு வைரல்

 

லண்டன்: ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், மூத்த வீரர்களை நடத்தும் விதம் குறித்து பாலிவுட் நடிகை அமீஷா படேல் கடுமையாக சாடியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (ஜூலை 19) ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா (37) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன.

கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, 2027ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான தேர்வுக்குழுவின் திட்டத்தில் ரோகித் சர்மா இல்லை என்றும், லார்ட்ஸ் ஒருநாள் போட்டியே அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கக்கூடும் என்றும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இந்த விவகாரம் குறித்து பாலிவுட் நடிகை அமீஷா படேல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வைரல் பதிவில், ‘பாலிவுட் தொடர்பு இல்லாத ஒரு பதிவு; விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற மூத்த முன்னணி நட்சத்திர வீரர்கள் இந்த கிரிக்கெட் காலத்தில் நடத்தப்படும் விதம் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

இதனை ஒரு கொடூரமான கிரிக்கெட் காலம் என்றுதான் சொல்ல வேண்டும், இது வெட்கக்கேடானது’ என்று மிகவும் காரசாரமாக சாடியுள்ளார். தற்போதைய ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 233 ரன்களுக்கு ஆட்டமிழந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது; மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ரோகித் சர்மாவுக்கு இங்கிலாந்து அணி கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: