×

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே உண்ணாவிரதப் போராட்டம்

டெல்லி: ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட காரணங்களுக்காக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி அபிஜித் திப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதியில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கினர்.

முன்னதாக, டெல்லி ஜந்தர் மந்தரில் 21ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை டெல்லி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயர்நீதிமன்ற அறிவுறுத்தலையும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு போலீசார் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் தற்போது போராட்டத்தின் தொடர்ச்சியாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அபிஜித் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, ஆதரவாளர்களிடையே அவர் பேசியதாவது;

இன்று முதல் எனது காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறேன்.போராட்டத்திலிருந்து யாரும் பின்வாங்க வேண்டாம் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒன்றி அரசு பெரிய தவறு செய்துள்ளனர். இந்த இயக்கம் இன்னும் பெரிதாக வளர வேண்டும். அனைவரும் ஜந்தர் மந்தருக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : ABHIJIT TIBKE ,KARAPANBUCHI JANATA PARTY ,DELHI ,Karabapuchi Janata Party ,Abhijit Dipke ,Union Education Minister ,Dharmendra Pradhan ,Union Minister ,
× RELATED CBSE 2026-ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு...