ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 18: ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ரோட்டில் மதுவிலக்கு சிறப்பு படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை லாரியிலிருந்து இறக்கி மோட்டார் சைக்கிளில் கடத்த முயன்றனர்.
இதையடுத்து சங்கரன்கோவிலை சேர்ந்த நாகராஜ், சிவகாசியை சேர்ந்த முத்துப்பாண்டி ஆகிய 2 பேரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 91 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கடத்த பயன்படுத்திய கண்டெய்னர் லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
