தோட்டத்தில் பதுக்கிய குட்கா பறிமுதல்

வத்திராயிருப்பு, ஜூலை 18: வத்திராயிருப்பு அருகே தோட்டத்தில் பதுக்கிய குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் இருந்து கோட்டையூர் சாலையில் உள்ள விவசாய தோட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வத்திராயிருப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வத்திராயிருப்பு சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு குட்கா பதுக்கி வைத்திருந்த கோட்டையூரை சேர்ந்த அய்யனார் மனைவி நாகம்மாள்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். 46 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் கோட்டையூரை சேர்ந்த விஜயகுமார் என்ற விஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Related Stories: