ஜூலை 24ம் தேதி நடக்கிறது விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை, ஜூலை 18: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும் ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ளது. மதுரை மாவட்ட விவசாயிகளின் குறைகளைத்தீர்க்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் இந்த மாத்திற்கான குறைதீர் கூட்டம் வரும் ஜூலை 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்கும், இக்கூட்டத்தில் விவசாயம் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆகவே விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக, மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: