- டெங்கு
- வலங்கைமான்
- அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
- திருவாரூர் மாவட்டம்
- கலெக்டர்
- மோகன சுந்தரம்
- மாவட்ட சுகாதார அலுவலர்
- சங்கீதா அனைக்கினங்கா
- மாவட்ட மருத்துவ அலுவலர்
- முகம்மது...
வலங்கைமான் ஜூலை 18: வலங்கைமான் அடுத்த அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனசுந்தரம் உத்தரவுப்படி மாவட்ட சுகாதார அலுவலர் சங்கீதா ஆணைக்கினங்க மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் முகமது தாரிக் அவர்களின் வழிகாட்டுதலின்படி அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கிறிஸ்டினா தலைமை யேற்று டெங்கு எதிர்ப்பு மாதம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரித்துவார மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக டெங்கு எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் விவேகானந்தன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஆலங்குடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கோபு (பொ)மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பாலாஜி, மற்றும் ஆசிரியர்கள் ராஜேந்திரன் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செந்தில், பாலாஜி, கலையரசன் மற்றும் ஆசிரியை ரஜிதா, ஸ்ரீமதி மற்றும் காவல்துறையினர் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள்ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் நோய்க்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பின் பள்ளியில் நிறைவு செய்யப்பட்டது.
