தஞ்சாவூர் ராயமுண்டான்பட்டியில் பாழடைந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கும் விஏஓ அலுவலகம்

தஞ்சாவூர், ஜூலை 18: ராயமுண்டான்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் முக்கியமான பெரிய கிராமமாக ராயமுண்டான்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம் பல ஆண்டுகளாக பயன்படுத்த இயலாத நிலையில் பூட்டியே கிடக்கிறது.

இந்த கிராம நிர்வாக அலுவலர் அருகில் உள்ள கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடத்தில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் கிடக்கும் ராயமுண்டான்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடத்தை மீண்டும் கட்டி கிராம நிர்வாக அலுவலர் கிராமத்தில் இருந்தே பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: