×

பெண் ஜிம் உரிமையாளரை பலாத்காரம் செய்த வாலிபர்; வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி: ரூ.4.50 லட்சம், நகை பறிப்பு

வேலூர்: பெண் ஜிம் பயிற்சியாளருக்கு மயக்க மருந்து கொடுத்து கணவன் பாலியல் பலாத்காரம் செய்தபோது மனைவி வீடியோ எடுத்து மிரட்டி ரூ.4.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் சுமார் 35 வயது கொண்ட பெண் ஒருவர் ஜிம் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஜிம்மில் ஏராளமானவர்கள் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு சத்துவாச்சாரி அன்னை தெரசா தெருவை சேர்ந்த எப்சியா (33) என்ற பெண் ஜிம்மில் சேர்ந்துள்ளார்.

இவர் வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். அவர் உடற்பயிற்சி நிலையத்துக்கும் வந்து சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் ஜிம் உரிமையாளரிடம் நெருக்கமாக பழகி உள்ளார். அப்போது தன்னுடைய கணவருக்கு சரியான வருமானம் இல்லை. எங்கள் குடும்பத்திற்கு நீங்கள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று அடிக்கடி தன்னுடைய சோக கதையை எப்சியா கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் எப்சியா தனது மகனுக்கு பிறந்தநாள் வருகிறது. நீங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என உடற்பயிற்சி கூட உரிமையாளரை வற்புறுத்தி அழைத்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி உடற்பயிற்சி கூட பெண் உரிமையாளர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, எப்சியா மற்றும் அவரது கணவர் மணிவண்ணன் (38) இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி கூட உரிமையாளருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதை குடித்த சிறிதுநேரத்தில் அந்த பெண் மயக்கமடைந்துள்ளார்.

அந்த நேரத்தில் எப்சியாவின் கணவர் அந்த பெண் உரிமையாளரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை மனைவி எப்சியா வீடியோ எடுத்துள்ளார். மேலும் நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்துள்ளார். தொடர்ந்து, 6 மாதங்களாக அவ்வப்போது அந்த பெண் உரிமையாளரை மிரட்டி ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், நகைகள் போன்றவற்றை தம்பதி பறித்து உள்ளனர்.

ஒரு கட்டத்தில் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அப்போது ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் கூறி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜிம் பெண் உரிமையாளர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தம்பதியை கைது செய்தனர்.

Tags : Vellore ,Chathuvachari ,
× RELATED +2 தேர்வு தோல்விக்காகத் திட்டிய தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!