சென்னை: மரியாதை நிமித்தமாக ஒன்றிய சமூகநீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஒன்றிய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தமிழக முதல்வர் விஜய்யை நேற்று நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, தமிழகத்தில் சமூக நீதி, பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலத் திட்டங்கள், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதேபோல், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவும் நேற்று முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பும் மரியாதை நிமித்தமானதாகவே நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
