தொழிலாளர் கட்சி தலைவரானார்: இங்கிலாந்து பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் தேர்வு

 

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவராகவும், பிரதமராகவும் கெய்ர் ஸ்டார்மர் பதவி வகித்து வந்தார். நாட்டில் பொருளதார வளர்ச்சியை ஏற்படுத்த தவறியது, மக்களின் அன்றாட செலவுகள் அதிகரிப்பு, கடந்த மே மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வி போன்ற காரணங்களால் கெய்ர் ஸ்டார்மர் மீது அதிருப்தி ஏற்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த மாதம் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து தொழிலாளர் கட்சி தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ஆன்டி பர்ன்ஹாம் மட்டுமே போட்டியிட்டதால், நேற்று அவர் முறைப்படி தொழிலாளர் கட்சி தலைவராக, அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழிலாளர் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஆன்டி பர்ன்ஹாம் ஆற்றிய உரையில், “ மாபெரும் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நல்ல தலைவராக திகழ்வேன். எங்கள் முன்னுரிமைகள் மற்றும் நாங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் எவ்வித தயக்கமுமின்றி, தொழிலாளர்கள் கொள்கைகளை சார்ந்ததாகவே இருக்கும்” என உறுதி அளித்தார். தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது ராஜினாமாவை முறைப்படி மன்னர் சார்லசிடம் வழங்கியதும், வரும் திங்கள்கிழமை ஆன்டி பர்ன்ஹாமை புதிய அரசு அமைக்க மன்னர் சார்லஸ் அழைப்பு விடுப்பார். அதைத்தொடர்ந்து இங்கிலாந்து பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவி ஏற்க உள்ளார்.

Related Stories: