அரசு பஸ் கட்டணத்திலேயே 500 ஆம்னி பஸ் இயக்க தயார்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி

 

சென்னை: தலைமை செயலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாண்டியன் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: அரசு பேருந்து கட்டணத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம். அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் முதலமைச்சரிடம் இதற்கான கோரிக்கையை வைத்துள்ளது. ஆர்டிஓ அலுவலகங்களில் ஆம்னி பேருந்துகளுக்கான அனுமதியை பெறுவதற்கு ஒரு ரூபாய் கூட தற்போது லஞ்சம் வாங்கவில்லை. விழா காலங்களில் தொடர்ந்து ஆம்னி பேருந்து கட்டண உயர்வு என்ற குற்றச்சாட்டு பல்வேறு ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வரிடம் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் சார்ந்த 500 பேருந்துகள் வருடம் முழுவதும் அரசு பேருந்து கட்டணத்தில் இயங்குவதற்கு அனுமதி கோரி விண்ணப்பம் கொடுத்திருக்கிறோம். 500 ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்துகள் கட்டணத்திலேயே இயக்குவதற்கு தயாராக இருக்கிறோம். லஞ்சம் இல்லாததால் தான் அரசு கட்டணத்திலேயே தற்போது ஆம்னி பேருந்துகளை இயக்க முன் வந்துள்ளோம். இதுவரைக்கும் எங்கள் சங்கத்தில் 40 ஆம்னி பேருந்துகளுக்கு பர்மிட் பெறப்பட்டுள்ளது.

Related Stories: