×

கல்லணை கால்வாய் பக்கவாட்டு சுவர் சேதம்

தஞ்சாவூர், ஜூலை 17: தஞ்சை பெரியகோவில் அருகே கல்லணை கால்வாய் பக்கவாட்டு சுவர் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. தஞ்சை பெரிய கோவில் உலக புகழ் பெற்றதாகும். தமிழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர்.தஞ்சை பெரியகோவில் அருகே கல்லணை கால்வாய் உள்ளது. அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்வதற்காக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் முன்பு அகழியும், அதனையொட்டி ஒருபுறம் கல்லணைக்கால்வாய் எனும் புது ஆறும் உள்ளது.

இந்த புதுஆற்றின் குறுக்கே வாகனங்கள் சென்று வரும் வகையில் 2 பாலம் அமைக்கப்பட்டு அதில் சாலை போடப்பட்டுள்ளது. ஒரு பாலத்தின் வழியாக வாகன நிறுத்துமிடம் செல்லலாம்.மற்றொரு பாலத்தின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வழியாக பெரிய கோவில், பழைய பேருந்து நிலையம், அரசு மகப்பேறு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலத்தின் பின்புற சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவரில் தற்போது விரிசல் ஏற்பட்டு கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு சேதம் அடைந்த சுவரை சீர் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kallanai canal ,Thanjavur ,Thanjavur Periyakovil ,
× RELATED திமுகவில் இணைந்த பாமக நிர்வாகிகள்