- டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு
- திருச்செங்கோடு
- திருச்செங்கோடு நகராட்சி
- நகராட்சி
- மாநகர சபை தலைவர்
- நளினிசுரேஷ்பாபு
- திருச்செங்கோடு மேற்கு ரத சாலை, வடக்கு ரத…
திருச்செங்கோடு, ஜூலை 17: திருச்செங்கோடு நகராட்சி சார்பில், டெங்கு கொசு ஒழிப்பு பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியை, நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்செங்கோடு மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக மீண்டும் நகராட்சி அலுவலகத்தை பேரணி வந்தடைந்தது. இந்த பேரணியில் டெங்கு கொசுவை ஒழிக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கொசு உற்பத்தியை தடுப்போம், டெங்கு பரவலை தடுப்போம், கொசு வளரும் இடங்களை ஒழிப்போம், காய்ச்சலுக்கு உடனே சிகிச்சை எடுப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிய படி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் பேரணியாக வந்தனர்.
பேரணியில் 50க்கும் மேற்பட்ட டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டு, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி மருத்துவர் மணிவேல், நகராட்சி உதவி துப்புரவு அலுவலர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
