×

ராமநாதபுரத்தில் பிரபல நடிகை தர்ணா போராட்டம்

ராமநாதபுரம்: ரூ.15 கோடி மதிப்புள்ள தங்களது சொத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி ராமநாதபுரம் பஜாரில் திரைப்பட நடிகை ஷர்மிலி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவாரம்பூ, தங்க மனசுக்காரன், குணா, காவலன், தமிழன், மின்சார கண்ணா உள்ளிட்ட 160 திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷர்மிலி. இவர் நேற்று மாலை ராமநாதபுரத்தில் உள்ள அரண்மனை பெரிய கடை பஜாரில் ஒரு கடை முன்பு தனது கணவருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து நடிகை ஷர்மிலி கூறுகையில், ‘ராமநாதபுரம் பஜாரில் எனது குடும்பத்திற்கு சொந்தமாக ரூ.15 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. இதனை மற்றொரு தரப்பு திடீரென உரிமை கொண்டாடியது. இந்த சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பூட்டப்பட்ட கட்டிடத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர் தரப்பினர் திறந்து ஓட்டல் நடத்தி வருகின்றனர். மேலும் எனக்கும், எனது கணவர் மற்றும் உறவினர்களுக்கும் ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு எதிர்தரப்பினரே காரணம். தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக தங்களது சொத்தை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க’ கூறினார்.

Tags : Ramanathapuram ,Sharmili ,Ramanathapuram Bazaar ,Manasukkaran ,
× RELATED சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2,...