டெல்லி: ‘ககன்யான்’ உள்ளிட்ட முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் கடந்த ஓராண்டில் இஸ்ரோ அமைப்பிலிருந்து விலகியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. விண்வெளித் திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, விஞ்ஞானிகளின் இந்தத் தொடர் வெளியேற்றத்தைத் தடுக்க, விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா விதிகளை கடுமையாக்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
