×

காய்கறி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் 180 கிலோ பறிமுதல்

சிவகாசி, ஜூலை 16: சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் 180 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின் பேரில் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் மாநகர் நல அலுவலர், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் அடங்கிய குழு திடீர் சோதனை நடத்தினர்.

சுமார் 92 கடைகளில் சோதனை செய்ததில் 6 கடைகளில் 180 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழி பைகளை பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 200 அபராதம் விதித்தனர். மேலும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆய்வு அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் கண்ணன் தெரிவித்தார்.

 

Tags : Sivakasi ,Sivakasi Anna Vegetable Market ,Anna Vegetable Market ,Municipal Commissioner ,Kannan ,
× RELATED இந்திய அஞ்சல் சின்னம் வடிவமைப்பு போட்டி