×

அரசுப் பள்ளிகளின் பசுமைப் படைக்கு விவசாய கருவிகள் வழங்கல்

போடி, ஜூலை 16: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி மற்றும் சிலமலை ஆகிய பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவ்விரு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளைக் கொண்டு பசுமைப் படை செயல்பட்டு வருகிறது. இப்படையின் விவசாயப் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக, போடி தனியார் அமைப்பு சார்பில் விவசாயக் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பள்ளித் தோட்டப் பராமரிப்புப் பணிகளுக்காக மண்வெட்டி, கடப்பாரை, சீனாத்தட்டு, பூவாளி மற்றும் மண் இளக்கி உள்ளிட்ட விவசாயக் கருவிகள், சில்லமரத்துப்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியை வெ.கா. அமுதா மற்றும் சிலமலை பள்ளித் தலைமை ஆசிரியை ராஜலட்சுமி ஆகியோரிடம் நேரில் வழங்கப்பட்டன.

 

 

Tags : Green Corps of Government Schools ,Bodi ,Government Higher Secondary Schools ,Sillamarathupatti ,Silamalai ,Theni ,Green Corps ,
× RELATED தொழிலாளி தவறி விழுந்து சாவு