தஞ்சாவூர், ஜுலை 16: தூய்மை பணியாளர்களின் சேவையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ம் தேதி நமஸ்தே தினம் கொண்டாப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தினை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்து நமஸ்தே தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மேயர் (பொறுப்பு) மரு.அஞ்சுகம் பூபதி, ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி, மாநகர் நல அலுவலர் மரு. வீராச்சாமி மோகன் குமார் ஆகியோர் தலைமையில் Hand in Hand India தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டது.
