×

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா பேட்டி

சென்னை: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறினார். தலைமைச் செயலகத்தில் கேரளா உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா நேற்று தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்தார். அப்போது போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் ரமேஷ் சென்னிதலா நிருபர்களிடம் கூறியதாவது:

தென் மாநிலங்களில் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிப்பது குறித்து, கேரள அரசும் தமிழக அரசும் இணைந்து கூட்டாகச் செயல்பட முடிவு செய்துள்ளன. ​கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் காரர்களைக் கண்டறியும் நோக்கில், கடந்த 43 நாட்களாக ‘ஆபரேஷன் டூபான்’ (Operation Toofan) என்ற அதிரடி வேட்டை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

எல்லையோரப் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சரின் உதவியை கேட்கப்பட்டுள்ளது. ​கேரளாவில் நடைபெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்கத் தமிழக முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் அம்பாசிடராக நடிகர் மோகன்லால் மற்றும் தமிழ்நாட்டின் அம்பாசிடராக முதல்வர் விஜய் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்கவுள்ளனர். இதற்கு முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Kerala ,Home Minister ,Ramesh Chennithala ,Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,Vijay ,
× RELATED தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றம்...