கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் நிலவி வருகின்றது. கட்சியில் இருந்து சில எம்எல்ஏக்கள் வெளியேறி தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். எம்எல்ஏ ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான அணியினர் தங்களை உண்மையான திரிணாமுல் என்று கூறி வருகின்றனர்.
மேலும் இவர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வருகின்றார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி அணியில் இருந்த மூத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா நேற்று அதிருப்தி அணியான ரிதாப்ரதா அணியில் இணைந்தார். மதன் மித்ராவின் இந்த நடவடிக்கை மம்தா பானர்ஜி தலைமையிலான அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
