சிறையில் மாற்றுத்திறனாளி சித்திரவதை கொலை; சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

 

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: பெட்டிக்கடையில் போதை பாக்கு விற்பனை செய்ததற்காக நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, சிறைக்காவலர்களால் சித்திரவதை செய்து, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கின்றன. நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் சபரிநாதனின் உடலில் 19 காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

அதன்பிறகு தான் இதற்கு காரணமான நாகர்கோவில் தலைமை சிறைக்காவலரும், இரு சிறைக்காவலர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும். கொடூரமாக கொல்லப்பட்ட சபரிநாதனின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: