சென்னை: 3வது மொழியை விருப்பம் என்ற பெயரில் அறிமுகம் செய்துவிட்டு, அதனைத் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாய நிபந்தனையாக மாற்றுவது, மறைமுக மொழித் திணிப்பு அல்லாமல் வேறு என்ன? என்று தமிழச்சி தங்கபாண்டியன், திமுக எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். 9, 10ம் வகுப்பு மாணவர்கள் 3வது மொழிக்கான பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால்தான் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சான்றிதழ் பெற முடியும் என்ற சுற்றறிக்கையை CBSE திரும்பப் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
