×

நிலக்கரிச் சுரங்கங்களில் திருட்டு: 4 சிஐஎஸ்எப் அதிகாரிகள் சஸ்பெண்ட்

 

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி திருடப்படுவதைத் தடுக்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கடந்த இரண்டு வாரங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 4அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன்ஸ்பெக்டர் நிலையிலான இந்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள நிலக்கரிச்சுரங்கங்களில் திருடர்கள் மற்றும் மாஃபியா கும்பல்களால் நடத்தப்படும் நிலக்கரி திருட்டைத் தடுப்பதில் இந்த அதிகாரிகள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ‘உதவி கமாண்டன்ட்’ என்ற தற்காலிக உள்ளூர் பதவி நிலை திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Tags : CISF ,New Delhi ,Home Ministry ,Central Industrial Security Force ,Jharkhand ,West Bengal ,
× RELATED நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை சேமித்து...