வியட்நாம் விபத்தில் திருவண்ணாமலையை சேர்ந்தவரும் பலி

திருவண்ணாமலை: பிரபல செல்போன் நிறுவனம் ஒன்று தென்னிந்தியாவில் விற்பனை இலக்கை எட்டிய தங்களது விநியோகஸ்தர்கள் பலரை வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து சென்றது. நேற்றுமுன்தினம் வியட்நாம் நாட்டில் உள்ள பூ குவோக் தீவுக்கு விநியோகஸ்தர்கள் படகில் சுற்றுலா புறப்பட்டனர். அப்போது படகு திடீரென கவிழ்ந்தது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் உள்பட 15 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.

இறந்த 10 பேரில் திருவண்ணாமலையை சேர்ந்த ரவிசங்கர் (51) என்பவரும் ஒருவர் என தெரியவந்தது. இவர் பிரபல செல்போன் விநியோகஸ்தராக இருந்துள்ளார். இவரது மனைவி காயத்ரி, மகன் ராம்பிரசாத், மகள் சொர்ணலட்சுமி ஆகியோர் உள்ளனர். ரவிசங்கரின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Related Stories: