தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா இல்ல திருமண வரவேற்பு விழா: ஒன்றிய அமைச்சர் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா இல்ல திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா – வி. சுகந்தா ராஜா தம்பதியரின் மகன் ஏ.எம்.வி. பிரதாப் ராஜாவுக்கும், பி. பிரினா ஷரீஷுக்கும் நடைபெற்ற திருமண வரவேற்பு விழா ஷெனாய் நகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், திமுக எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், தொழிலதிபர் லெஜண்ட் சரவணன், தவெக நிர்வாகி சினோரா அசோக், நடிகர்கள், அரசியல், வணிகம், தொழில் மற்றும் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Stories: