ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் ஜீப் வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கல்லிப்பட்டி அருகே கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் வத்திராயிருப்பைச் சேர்ந்த கார்த்திக், அங்காள ஈஸ்வரி, ஓட்டுநர் பூபதி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 6 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
