×

பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் நடைமேடையை ஆக்கிரமித்து கடை வியாபாரிகள் அடாவடி: பயணிகள் அவதி

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் நடைமேடையை கடை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வெளியில் வெயிலில் நின்று பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.

தமிழகம், ஆந்திராவில் பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்து நிலையத்தில் பேரூராட்சி சார்பில் வணிக வளாகத்தில் குத்தகைக்கு உரிமம் பெற்றுள்ள வியாபாரிகள் கடைகளை நடைமேடை வரை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால், பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் வெளியில் வெயிலில் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பேருந்து நிலையத்திற்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தி வணிக வளாகத்தில் அனைத்து கடைகள் வைத்து நடைமேடையில் கடைகள் ஆக்கிரமிப்பு அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பயணிகள் அமர இருக்கைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் அருகே இரூர் கல்குவாரியில்...