இன்று கடைசி டி.20 போட்டி: ஒயிட்வாஷ் தவிர்க்குமா இந்தியா?: அடித்து துவம்சம் செய்ய காத்திருக்கும் இங்கிலாந்து

சவுத்தாம்டன்: இங்கிலாந்து-இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் அடுத்த 3 போட்டியிலும் இங்கிலாந்து வெற்றிபெற்று 3-0 என தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 5வது மற்றும் கடைசி டி.20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு சவுத்தாம்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் ஆறுதல் வெற்றி பெற்று ஒயிட்வாஷை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களம்இறங்குகிறது.

பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாசை தவிர டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் சொதப்பலாக உள்ளது. பவுலிங்கும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இங்கிலாந்தின் பார்ட்டைம் பவுலர் வில் ஜாக்ஸ் கூட சிறப்பாக பந்துவீசி உள்ளார். ஆனால் இந்திய ஸ்பின்னர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். மறுபுறம் பேட்டிங், பவுலிங்கில் அசுர பலத்துடன் உள்ள இங்கிலாந்து இன்றும் வெற்றியை தக்க வைத்து இந்தியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது. அந்த அணியின் பார்மை பார்த்தால் இந்த போட்டியிலும் இந்தியாவை துவம்சம் செய்யும் என்றே தெரிகிறது.

 

Related Stories: