ஆந்திரா அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து. நல்வாய்ப்பாக அதில் இருந்த 8 மீனவர்களும் உயிர் தப்பினர். சென்னை காசிமேட்டிலிருந்து புறப்பட்ட விசைப்படகு மீன்பிடித்துத் திரும்பும்போது படகில் பழுது ஏற்பட்டு கடலில் மூழ்கி உள்ளது. தகவல் அறிந்து வந்த சக மீனவர்கள், தண்ணீரில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றி உள்ளனர்.
