திருவள்ளூர்: திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக நம்ப வைத்து ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மோசடி செய்த தவெக பிரமுகர் ஜெய் கிருஷ்ணா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிரமுகர் தலைமறைவான நிலையில் திருத்தணி மகளிர் போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
