- உயர் நீதிமன்றம்
- புதுக்கோட்டை
- சிமைகருவா
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்ட ஆளுநர் அலுவலகம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- மாவட்ட கலெக்டர்
- அருணா
- சிமைகருவெல்லா
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது; சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீர்மட்டம், விவசாய வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிப்பதால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடியும், அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்து துறைகளின் சார்பில் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து, மீதமுள்ள அல்லது அகற்றபடாமல் உள்ள சீமைக்கருவேல மரங்களை போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொண்டு அகற்றிட அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். மேலும் ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாய்களில் அகற்றபடாமல் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாகப் பின்பற்றி, நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, புதுக்கோட்டை மாவட்டத்தை சீமைக்கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைச்சாமி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, காவல்துறை, வனத்துறை மற்றும் பிறத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் பலர்
கலந்துகொண்டனர்.
