- தாதா
- மும்பை
- தாதா
- ஷாசாத் பட்டி
- அபித் ஜாட் (அ) அபித் சால்
- அஜ்மல் குஜார்
- முகமது மெமன்
- ராணா ஹுசைன்
- அஷ்ரஃப் பஷீர் ஆலம்
- முகநூல்
- படவரி
- பகிரி
மும்பை: பாகிஸ்தான் தாதாவான ஷாசாத் பட்டி, தனது கூட்டாளிகளான அபித் ஜாட் (எ) அபித் சால், அஜ்மல் குஜார், முகமது மேமன், ரானா ஹுசைன், அஷ்ரப் பஷீர் ஆலம் ஆகியோர் முகநூல், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் வாலிபர்களுடன் ஒரு வலைப்பின்னலை உருவாக்க முயன்றதாக தெரிகிறது.
குறிப்பாக வேலையில்லாத இளைஞர்களைக் கவரும் வகையில் தூண்டுதல்மிக்க மத ரீதியான கருத்துகளைப் பரப்பியதாகவும், தகவல் சேகரிப்பு, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் நோக்கில் நிதி உதவி அளிப்பதாகக் கூறி அவர்களை ஈர்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையின் 14 பிரிவுகளைச் சேர்ந்த குழுக்கள், நேற்று ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடங்கினர். அதன்பேரில் சந்தேகத்திற்குரிய 112 பேரை பிடித்து விசாரித்து வருகிறது.
