×

போதைப்பொருள் ஒழிப்புக்கு தென்மாநிலங்கள் இடையே நிரந்தர ஒருங்கிணைப்பு

திருவனந்தபுரம்: கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழ்நாடு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர், புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங், கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி ஆர். ஹிதேந்திரா கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தென் மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில எல்லைகளில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க தென்மாநில போலீசார் இணைந்து தீவிர சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. போதைப்பொருளை ஒழிக்க தென்மாநிலங்கள் இணைந்து ஒரு நிரந்தர ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Tags : Thiruvananthapuram ,Tamil Nadu ,DGP ,Mahesh Kumar Agarwal ,Kerala ,Rawada Chandrasekhar ,Puducherry ,Shalini Singh ,Karnataka ,State ,R. Hitendra ,Home Minister ,Ramesh Chennithala ,
× RELATED ரயில் டிக்கெட்டின் செல்போன்...