வேதாரண்யம், ஜூலை 10: வேதாரண்யம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்கட்டமைப்பு, அதிநவீன மருத்துவக் கருவிகள் உள்ளன. ஆனால் போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை. போதுமான மருத்துவர்கள் இல்லாததால் பெரும்பாலான நோயாளிகள் நாகைக்கும், திருவாரூருக்கும் மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறார்கள். மேலும் பல்வேறு நோய்களுக்கு போதுமான மருந்துகளும் இல்லை என்பது நோயாளிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
