×

திருவாடானை நகர் பகுதியில் அசுர வேகத்தில் செல்லும் பேருந்துகள்: அச்சத்தில் பொதுமக்கள்

 

திருவாடானை. ஜூலை 9: அசுர வேகத்தில் செல்லும் தனியார் பேருந்துகளால் விபத்து அபாயம் உள்ளதால், போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தாலுகா தலைநகரமான திருவாடானையில் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லும் வகையில் பேருந்து போக்குவரத்து வசதி உள்ளது. இதனால் இந்த பேருந்து நிலையம் மட்டுமின்றி, வர்த்தக நிறுவனங்கள், தாலுகா அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்காக தினமும் ஏராளமான பொதுமக்களும், பயணிகளும் இங்கு வந்து செல்லும் நிலை உள்ளது.

Tags : Thiruvadana Nagar ,Thiruvadana ,Kamaraj Bus Stand ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...