- கோயம்புத்தூர்
- ஐ.நா.
- வள்ளுவன்
- ஜிவி அரங்கம்
- கோவை ரேஸ்கோர்ஸ்
- டாக்டர்
- கிருஷ்ணராஜ் வனவராயர்
- KPR குழும நிறுவனங்கள்…
கோவை, ஜூலை 9: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜிவி அரங்கத்தில் ஐநா அங்கீகாரம் பெற்ற பொள்ளாச்சி விவசாயி வள்ளுவனுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் கல்வியாளர் டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். கேபிஆர் குழும நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் விவசாயி வள்ளுவனை பாராட்டினர்.
விழாவில் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், ” வள்ளுவன் வேட்டைக்காரன்புதூர் பகுதிக்கு வந்து, 7 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்யத் துவங்கி உள்ளார். உற்பத்திச் செலவைக் குறைத்து, உற்பத்தித் திறனை அதிகரித்து, லாபத்தைப் பெருக்கினார். 7 ஏக்கரில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, சிறிது சிறிதாக சேர்த்து இன்று கிட்டத்தட்ட 30 ஏக்கர் நிலம் வைத்துள்ளார், ’’ என்றார். இதில் சாந்தி அஷ்ரம தலைவர் கேசவினோ அறம், சுழற்சங்க ஆளுநர் மாருதி, சிபாகா தலைவர் சுகுமார், மரபின் மைந்தன் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
