தமிழகம் முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்

 

கோபி, ஜூலை 9: தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மதுரையை சேர்ந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மதுரை மாவட்டம் கீழவாசலை சேர்ந்தவர் ராம் (30). ஏரொநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ள இவர் தமிழகத்தில் போதை பொருள் பயன்படுத்துவதை தடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் வழியாக நீலகிரி மாவட்டத்தை நோக்கி சென்றார்.

 

Related Stories: