முந்திச் செல்ல முயன்றதால் விபரீதம் பயணிகள் வேன்கள் மோதல்: விருதுநகரைச் சேர்ந்தவர்கள் காயம்

 

பேரையூர், ஜூலை 9: பேரையூர் அருகே யார் முந்திச்செல்வது என அசுர வேகத்தில் இயக்கியதால், இரு பயணியர் வேன்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பெண்கள் உள்ளிட்ட 24 பேர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகே வி.குச்சம்பட்டியில் பாலித்தீன் இல்லாது கயிறு திரிக்கும்,கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதில், பேரையூர், டி.கல்லுப்பட்டி, சந்தையூர், மேலப்பட்டி, கீழப்பட்டி, குச்சம்பட்டி, ரெட்ரப்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஷிப்ட் முறைப்படி வேலை நடைபெறும் நிலையில், நேற்று இந்த கம்பெனிக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இரு வேன்கள் புறப்பட்டன.

Related Stories: