வேலூர், ஜூலை 9: வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணைப்பகுதியை ரூ.18 கோடியில் சுற்றுலா தலமாக்கப்படுகிறது. இதற்கான திட்ட அறிக்கை திமுக ஆட்சியிலேயே தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆந்திர மாநிலம் புங்கனூரு கவுண்டன்யா வனப்பகுதியில் உற்பத்தியாகி பலமநேரு வழியாக தமிழக-ஆந்திர எல்லையான மோர்தானாவில் நுழையும் கவுண்டன்யா நதி பள்ளிகொண்டா அருகே பாலாற்றில் இணையும், இந்த நதியின் குறுக்ேக மோர்தானாவில் குடியாத்தம் வட்டாரத்தில் பாசன வசதியை அதிகரிக்கும் நோக்கில் ஒரு அணையை கட்ட அப்போதைய திமுக அரசு திட்டமிட்டது.
