திருச்சி, ஜூலை 9: திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி காலில் காயங்களுடன் ஒரு வாலிபர் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது அந்த வாலிபருக்கு உதவ மருத்துவ பணியாளர்கள் முன் வந்தனர். இதை அந்த வாலிபர் செல்போனில் வீடியோ எடுத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவரிடம் தகராறு செய்தார். இதை கண்டித்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிந்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
