சென்னை: கிராமங்களில் உள்ள மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை திட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாக சேர்வதில்லை என புகார்கள் வருகின்றன. திட்டங்கள் சென்று சேர்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். முதல்வர் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடந்த நிலையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
