சென்னை: சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை பாதுகாப்பது நீதிமன்றங்களின் சட்டக் கடமையாகும் என முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் காவலர்களாக விளங்கும் உயர்நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் ஏற்றுள்ள சட்டக் கடமையாகும். இஸ்லாமியர்களுக்கு பின்தங்கிய வகுப்பினர் என்பது காலம் காலமாக இருந்து வரும் உரிமை. புதிதாக மதம் மாறுபவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் எதிர்ப்பு தெரிவித்தார்.
